2025 மே 19, திங்கட்கிழமை

கல்முனை அபிவிருத்தி என்பது முஸ்லிம் காங்கிரஸின் நாடகம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான்

கல்முனையின் அபிவிருத்திக்கெனக் கிடைத்த ஐநூறு மில்லியன் ரூபாயில் நான்கு மாதத்துக்குள் கல்முனை நவீனம் அடையும் என முஸ்லிம் காங்கிரஸ் சொல்வதானது அக்கட்சியின் ஆயிரத்து ஓராவது  ஏமாற்று நாடகம் என உலமா கட்சியின் தலைவர்  முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அவர் இதனை, கல்முனைக்கு கிடைக்கப் பெற்ற நிதிதொடர்பில் ஊடக வியலாளருக்கு எழுப்பிய கேள்வியொன்றிற்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனை சந்தையில் உள்ள கழிவறையையோ அல்லது பஸ்தரிப்பிடத்தினையெ கட்டித்தரவில்லை.

கல்முனை நகரின் அபிவிருத்திக்கென பல்வேறு தரப்பினரும் பணம் வழங்கிய போதிலும் அப்பகுதியில் எவ்வித அபிவிருத்தியும்; ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X