2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை புதிய நகர் திட்டத்தை கைவிட வேண்டும் :விஜயரெத்தினம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் வெளியிடங்களில் வாழும் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர நன்மையில்லை. எனவே, இத்திட்டத்தை கைவிடவேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ.விஜயரெத்தினம் தெரிவித்தார்.

கல்முனை புதிய நகரஅபிவிருத்தித் திட்டம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இத்திட்டமானது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடாகும். சுனாமி அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரின் உதவி மூலம் கட்டப்பட்ட வீட்டுத் தொகுதியில் தமிழர்களைக் குடியேற்றாது வெளியிடங்களில் வசித்த முஸ்லிம்களை குடியேற்றி தமிழர்களின் வாக்கு வங்கியினை குறைப்பதற்காக மேற்கொண்ட சதியினை மறந்துவிடமுடியாது.

அதேபோன்று இன்று புதிய நகர அபிவிருத்தி திட்டம்  என்ற போர்வையில் தமிழர்களின் பெரும்பகுதி நிலங்களைச் சுரண்டி முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் அரசியல் தலைமைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .