Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Sudharshini / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினை குறித்த கலந்துரையாடல், எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதென, ஆலம்குளம் விவசாய அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் யூ.கே.சம்சுதீன் இன்று (06) தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இக்கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெறவுள்ளது. மேலும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை பிரதேச செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பதமாக குறிப்பிட்ட பிரதேச செயலாளர்கள் தங்களின் பிரதேச செயலகத்துக்குட்பட் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து, எழுத்து மூல ஆவணங்களையும் அன்றைய கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக சுமார் 500ற்கும் மேற்பட்ட கரும்புச் செய்கையாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
36 minute ago
1 hours ago