அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சார்க் நாடுகளின் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்குமான அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தெற்காசிய நாடுகளின் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான கலாபூஷணம் கவிஞர் ஏ.பீர்முகம்மது இன்று (17) புதுடில்லிப் பயணமானார்.
இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை மூன்று தினங்கள் புதுடில்லியில் நடைபெறும் இந்நிகழ்வில் சார்க் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேராளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026