2025 ஜூன் 28, சனிக்கிழமை

குடிநீர் பௌசர்கள் வழங்கிவைப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 மார்ச் 31 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குடிநீர் வழங்குவதன் முதற்கட்டமாக, நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, குடிநீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன என, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

இதற்கமைய, பதியத்தலாவ, உகன, பொத்துவில், நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர்களிடம், குடிநீர் பௌசர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குடிநீர் வழங்குவதற்காக, பொது நிர்வாக மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சால், நாடளாவிய ரீதியில் குடிநீர் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .