2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூலை 23 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அக்கரைப்பற்று  பிரதேசத்தில் 09 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 20 வயதுடைய இளைஞனை நேற்று(23) பட்டியடிப்பிரதேசத்தில் வைத்து அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேகநபர், பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும், இவர் அக்கரைப்பற்று பகுதியில் தொழிலில் செய்துகொண்டிருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை, நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X