2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுகாதார அமைச்சுப் பதவியை உதுமாலெப்பைக்கு வழங்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள சுகாதார அமைச்சுப் பதவியை மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு வழங்குமாறு அம்பாறை மாவட்ட பிரஜைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜரொன்றை இன்று வியாழக்கிழமை அனுப்பிவைத்துள்ளதாக இந்த அமைப்பின் தலைவர் எம்.ஏ.கபீர் தெரிவித்தார்.

அம்மகஜரில், 'கிழக்கு மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் இரு முறைகள் அமைச்சராகவிருந்து இன, மத, பிரதேச வேறுபாடுகள் பார்க்காது மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிள்ளார்.  

சேவைத்திறனும் சிறந்த ஆளுமையும் நற்குணமும் கொண்ட இவரிடமிருந்து அமைச்சுப் பதவியை அரசியல் சுய இலாபங்களுக்காக பறிக்கச் செய்தமை கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின சமூகங்களுக்கும்; பேரிழப்பாகும். எனவே, தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு வழங்கி தொடர்ந்தும் அவரது பணியை மக்களுக்கு கொண்டுசெல்ல வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X