2025 மே 19, திங்கட்கிழமை

சிகரெட் வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட டொப் ரக சிகரெட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  இருவரில் ஒருவருக்கு 9,500 ரூபாயும், மற்றையவருக்கு 5,000 ரூபாயும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை (05) அபராதம் விதித்துள்ளார்.
 
அக்கரைப்பற்றுப் பொலிஸார், நேற்று வியாழக்கிழமை (04) இரவு குறித்த நபர்களைக் கைதுசெய்திருந்தனர்.
 
குறித்த நபர்களை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (05) ஆஜர்செய்த போது 19 சிகரெட் வைத்திருந்தவருக்கு 09 ஆயிரத்தி 500 ரூபாயும், 10 சிகரெட் வைத்திருந்தவருக்கு 05 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X