2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சக்கர நாற்காலிகளை கையளிக்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

விசேட தேவையுடையவர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஒரு தொகுதி சக்கர நாற்காலிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதலமைச்சரின் கொழும்பு இல்லத்தில் வைத்து கையளித்து வைக்கப்பட்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அம்பாறை மாவட்ட தெஹியத்த கண்டியைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்கள் தங்களுக்கு சக்கர நாற்காலிகள் தேவை என விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சக்கர நாற்காலிகளை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரினால் நீர் வழங்கள் அமைச்சின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மஹிலாலிடம் கையளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் சொந்த நிதியிலிருந்து இந்த உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .