2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Niroshini   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பள்ளக்காடு களியோடை ஆற்றில் நேற்று சனிக்கிழமை மாலை சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆலையடிவேம்பு,அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய  குற்றத் தடுப்பு பிரிவினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த மூவரும் உழவு இயந்திரத்தின் இழுவைப்பெட்டியில் ஆற்று மண் ஏற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .