2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின்; அக்கரைப்பற்றிலுள்ள வீட்டில் காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது மதுபோதையில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (13) மாலை தாக்கியதில், காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்   பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்; சிவில் உடையில்  அவரது நண்பர்கள் மூவருடன் மதுபோதையில் அதாவுல்லாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில்,  முன்னாள் அமைச்சரினால் தாம்; சிறை சென்றதாகவும் அவரைச் சந்திக்கவேண்டுமென்று காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் நண்பர்கள் மூவரும்  தெரிவித்தனர்.

இதன்போது, முன்னாள் அமைச்சர் இங்கு இல்லையெனவும் அவர் கொழும்பிலுள்ளதாகவும் கூறி அவர்களை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்  அனுப்ப முற்பட்டுள்ளார்.   இதனைத் தொடர்ந்து, தனது நண்பர்;களை ஏசியதாக காவல்க் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் கூறி, அவர் மீது  மதுபோதையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X