2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இன்று சனிக்கிழமை (20) காலை, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் என்பவற்றுக்கான அடிக்கல்லினை நட்டி வைப்பதற்காகவும் மாணவர்களுக்கான விடுதியைத் திறந்து வைப்பதற்காகவும் இன்று (20) காலை, உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வருகை தரவிருந்தார்.

பல்கலைக்கழகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக அமைச்சர் உறுதியளித்தால் மாத்திரமே அமைச்சரை பல்கலைக்கழகத்துக்குள் செல்லவிடுவது எனத் தெரிவித்து மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமையால் பிற்பகல் 02 மணிவரை அமைச்சரின் வருகை இடம்பெறவில்லை.

பொறியியல் பீடம், வணிகம் மற்றும் முகாமைத்துவ பீடம் உள்ளிட்ட ஐந்து பீடங்களின் மாணவர்கள் ஒன்றிணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

பல்கலைக்கழகம் சுதந்திரமாக இயங்குவதற்குத் தடையாகவுள்ள பொலிஸ் காவலரனை உடன் அகற்ற வேண்டும், அரசியல் நாடகத்தை பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்படுவதை உடன் நிறுத்து, விடுதியில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X