எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வழங்கப்படும் 2019ஆம் ஆண்டுக்கான இலவச வெளிநாட்டு புலமைப்பரிசில், சுற்றுப் பயணத்துக்கான நேர்முகப் பரீட்சை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் நாளை (21) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாறக் அலி தெரிவித்தார்.
இந்த நேர்முகப் பரீட்சைக்குச் சமுகமளிப்போர், 15 - 29 வயதுக்குட்பட்டவராக இருப்பதோடு, இளைஞர்கழக அடையாள அட்டை, இளைஞர் கழகத்தல் உறுதிப்படுத்தப்பட்ட நற்சான்றிதழ், இளைஞர் கழகத்தில் அங்கத்தவர் அல்லது வேறு ஏதாவது பதவி உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் சமுகமளித்தல் வேண்டுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகத் தகவல்களுக்கு 067-2225585, 063-2223322 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago