2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பாராட்டு விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் விஞ்ஞான பட்டதாரி கணித ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பதிவாளராகவும்  சேவையாற்றி தனது 39 வருட ஆசிரிய சேவையிலிருந்து  ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எம்.தாஜுதீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம், கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், ஓய்வு பெற்ற இக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஏ.உதுமா லெவ்வை, ஓய்வு பெற்ற முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.நஜுமுதீன், அதிபர் ஏ.ஜி.அன்வர், பிரதி அதிபர் எம்.எம.எம்.மீராசாஹிப், உதவி அதிபர் றிபாஸ். ஏ. அஸீஸ், பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் ஏ.ஜி.அப்துல் கபூர், முன்னாள் செயலாளா என்.எம்.நஜுமுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆசிரியரின் சேவையைப் பாராட்டி கல்லூரி அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X