2025 ஜூன் 25, புதன்கிழமை

பிரதேச சபைத் தேர்தலில் அப்துல் மஜித்தை களமிறக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் பொத்துவில் முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரும் முன்னாள்  மாகாணசபை உறுப்பினருமான எஸ்.எஸ்.பி அப்துல் மஜித்தை களம் இறக்குவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்று வருவதாக எஸ்.எஸ்.பி அப்துல் மஜித்தின் ஆலோசகர் மௌலவி ஏ.முகைதீன்பாவா தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், 'பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்கொள்ளவுள்ள அடுத்த மிக முக்கியமான தேர்தல்; பிரதேச சபைத் தேர்தலாகும். இந்தத் தேர்தல் மூலம் முழுப் பொத்துவிலையும் ஆளுகின்ற ஒரு சிறந்த சாணாக்கியம் நிறைந்த தலைவரை தெரிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும். கடந்த பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் அநேகமானவர்கள் தாங்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததுடன், கிடைத்த பணங்களை பிரித்து பங்கிட்டு சூறையாடியுள்ளனர்.

அது மாத்திரமன்றி பாதைகள் கொந்தராத்து செய்து சில மாதங்களில் சேதமடைகின்ற வீதியின் அவலநிலையை பொத்துவிலில்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி காலகட்டத்தில் பொத்துவில் பிரதேச மக்கள் உள்ளனர். ஊரைக் காட்டிக்கொடுத்து, மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடுகின்றவர்களை ஓரம் கட்டி நியாயமான தலைவரை தெரிவுசெய்வதே எமது மக்களின் இலக்குகளில் ஒன்றாக உள்ளது. அதற்காக எஸ்.எஸ்.பி.அப்துல் மஜித்தை களமிறக்கவுள்ளோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .