2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பரிசு வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு இடைவிலகியிருந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை வலயக் கல்வி  அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர்  இடைவிலகி இணைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

சகல பிள்ளைகளுக்கும் கட்டாயக் கல்வி மூலம் எழுத்தறிவினை வழங்கி முழுமையான கல்வி சமூகத்தினை உருவாக்கி நிரந்தர அபிவிருத்தியை ஏற்படுத்துவோம் என்ற கருப்பொருளில் கல்முனை வலயக் கல்வி அலுவலக முறைசாரா கல்வி பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், முறைசாராக் கல்வி பிரிவு உத்தியோகத்தர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,ஆசிரியர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .