2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பறவைகளை பிடித்தவர் கைது

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

-எஸ்.ஜமால்டீன்

அட்டாளைச்சேனை, முல்லைத்தீவு கிராம வயல்வெளியில் சட்டவிரோதமாக தொண்டு வைத்து 5 பறவைகளை பிடித்து உயிருடன் வைத்திருந்த சந்தேக நபரை, இன்று புதன்கிழமை (07) அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அட்டாளைச்சேனை முல்லைத்தீவு பிரதேசத்தில் வைத்து குறித்த நபரிடம் இருந்து  பறவைகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பிரசேத்தைச் சேர்ந்த, 36 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X