Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர், பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தில், இலங்கை கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று, உதவி கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற இளையதம்பி மகாதேவன் உள்ளிட்ட பல சேவையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு, பொதிகை சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், ஓய்வுநிலை இளைஞர் சேவைகள் மன்றக் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சட்டத்தரணி க.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இதில், கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, சேவையாளர்களைக் கௌரவித்தார்.
(தகவலும் படமும்; பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்)


25 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago