2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதார பிரச்சினை; இணைந்த தீர்வு வேண்டும்

Freelancer   / 2023 மே 01 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

“தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில், எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள். எனவே, நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டும்” என கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

அம்பாறை - கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில், சர்வதேச தொழிலாளர் தினம்  தொடர்பில் நேற்று (30) மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் அவர்,

“சர்வதேச தொழிலாளர் தினத்தை தற்போது உலகம் பூராகவும் அனுஷ்டிக்கின்ற நிலையில், எமது நாட்டின் உள்ள நிலைமையினால் அத்தினத்தை மிக விமர்சையாக கொண்டாட முடியாததால் நாம் கவலை அடைகின்றோம். அந்த வகையில் எமது நாட்டின் பொருளாதார  சிக்கல்களுக்கு மத்தியில் இந்த ஊழியர் தினத்தை அனுஷ்டிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

“எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாட்டில் உள்ள ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். தற்போதைய வாழ்க்கை செலவு ஊழியர்கள் மத்தியில் சிரமங்களை கொடுக்கின்றது.

“கல்முனை பொதுச் சந்தையானது குறைந்த ஊழியர்களை கொண்டு சிறப்பாக இயங்கிய ஒரு சந்தையாகும். 

“நாட்டின் ஊழியர்களின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள சகல பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய  இணைந்து தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என கல்முனை பொதுச்சந்தையில் இருந்து மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

“எமது சகோதர்கள் போன்று அவ்வூழியர்களை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். இந்த ஒற்றுமையான நிலைமையை கல்முனை பொதுச் சந்தையில் மட்டுமல்லாது, நாடு பூராகவும் இவ்வாறான ஒற்றுமை நிலவ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

“மேலும், அனைத்து ஊழியர்களும் நிம்மதியாக வாழ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .