2025 மே 05, திங்கட்கிழமை

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, சம்மாந்துறையில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார் தெரிவித்தார்.

150 பக்கெட்டுகள் அடங்கிய 15,000 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றின் பெறுமதி 06 இலட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார்.

கிடைக்கபெற்ற இரகசியத் தகவலையடுத்து, நேற்று (26) அதிகாலை 5 மணியளவில் கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு வந்த பஸ்ஸை சோதனையிட்ட போதே, இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X