2025 மே 12, திங்கட்கிழமை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, கனகராசா சரவணன்

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் 5,000 ரூபாய் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போலி நாணயத்தாள் அச்சிடும் உபகரணங்களும், அம்பாறை இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, இன்று (24) மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, தன்வசம் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, சந்தேக நபரின் வீட்டை பரிசோதித்த போது, போலி நாணயத்தாள் அச்சிடும் பிரிண்டர் ஒன்றும், போலி நாணயத்தால் தயாரிக்கப்படும் தாள்களும், ஒளி நாடா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணையை, அம்பாறை இரகசியப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X