2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாடிக்கட்டடம் நிர்மாணிக்க நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,பி.எம்.எம்.ஏ.காதர்

மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 03 மாடிக் கட்டடம் நிர்மாணிப்பதற்கு 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தெரிவித்தார்.

அத்துடன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.

இந்த வைத்தியசாலைக்கு சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் தலைமையிலான குழுவினர் வருகைதந்து, அங்குள்ள பிரச்சினைகள்; தொடர்பில் ஆராய்ந்தனர். வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.மிஹ்ழார் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

இந்த வைத்தியசாலையில் பூரணப்படுத்தப்படாதுள்ள  கட்டட வேலைகளை பூரணப்படுத்த நிதி ஒதுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X