2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாணவிக்கு தொல்லைகொடுத்த நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சந்தேகநபரை, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், வெள்ளிக்கிழமை (16)  உத்தரவிட்டார்.

குறித்த மாணவி தனியார் வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு  திரும்பிக்கொண்டிருந்த போதே, மேற்படி சந்தேகநபர் குறித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாட்டை அடுத்தே, குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேற்படி நபர், தனியார் வங்கியொன்றில் சிற்றூழியராக கடமையாற்றி வருகின்றார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X