2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மிதி வெடி மீட்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, கனகராசா சரவணன்,எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிரங்குடா கோம்பாக்கரச்சி வயல் பிரதேசத்திலிருந்து செயலிழந்த நிலையில் காணப்பட்ட மிதி வெடியொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  வயல் பிரதேசத்தில்  வோளாண்மை செய்கைக்காக விவசாயிகள் நிலத்தை பண்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிலத்தில் மர்மபொருள் ஒன்றைக் கண்டனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு விவசாயிகள் தெரிவித்ததையடுத்து அவ் வெடி பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப் பகுதி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X