2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, நடராஜன் ஹரன்,

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6  பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X