2026 ஜனவரி 24, சனிக்கிழமை

மணல் அகழ்ந்த இருவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த  குற்றச்சாட்டில் இருவரை  சவளைக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை, வழுக்கமடு பகுதியில் நேற்று (29) நள்ளிரவு  சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலில் இச்சந்தேக நபர்கள் கைதாகினர்.

அண்மைக்காலமாக இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X