Editorial / 2023 மே 16 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்தும் மே 18 முள்ளிவாய்க்கல் நினைவு வாரத்தை முன்னிட்டு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய நுழைவாயில் பிரதான வீதிக்கு அருகில் முள்ளிவாய்க்கால் பேரவலத்து நினைவுப் பதாதைகள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
வருகை தந்த பாடசாலை மாணவர்கள் நினைவு புகைப்படங்களை பார்வையிட்டதுடன் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மாணவர்கள் மத்தியில் நினைவு உரையை நிகழ்த்தினார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இடம் நிகழ்வுகளுக்கு தமிழராய் இணைவோம் தமிழரின் பேரவலம் உணர்வோம் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் செய்வோம் திரண்டு வாருங்கள் என பொதுமக்கள், ஆலய நிருவாகங்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், ஆட்டோ சங்கத்தினர், சமூக அக்கறையாளர்கள் அரசியல் கட்சி பேதங்களுக்கப்பால் அனைத்து அரசியல்வாதிகளையும் அன்புரிமையுடன் இணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




17 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago