2025 மே 03, சனிக்கிழமை

மூதாட்டியின் காதுகளை துண்டாடி நகை அபகரிப்பு

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பசரிச்சேனை பிரதேசத்தில் வீடு புகுந்து 70 வயது மூதாட்டியின் இரு காதுகளையும் துண்டாக்கி, தங்க நகை அபகரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதாட்டியின் கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் சனிக்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ள மூதாட்டி, ஆபத்தான நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X