2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல்லப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கோமாரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் மேசன் வேலையை முடித்துவிட்டு விநாயகபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, பஸ்ஸொன்றுக்கு இடம் விட முற்பட்டதாகவும் இதன்போது, வீதி வளைவுக்கு அருகில் இருந்த கம்பமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் புஸ்பராசா (வயது 30)  என்ற குடும்பஸ்தர்  பலியாகியுள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய உதயகுமார் தீபன் என்பவர் காயமடைந்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X