Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்;வாக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் சிறிய, நடுத்தர, பெரியளவிலான கைத்தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் வியாபார உத்தரவுப்பத்திரங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதிக்கு முன்னராக பெற்றுக்கொள்ளுமாறு அப்பிரதேச சபைச் செயலாளர்; எஸ்.எம்.கலீல் றகுமான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
ஒலுவில், அட்டாளைச்சேனை, பாலமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வியாபார நிலையங்கள் முறையான வியாபார உத்தரவுப்பத்திரங்கள் இல்லாமல் இயங்குகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு வியாபார உத்தரவுப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு வியாபார உத்தரவுப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளத் தவறும் பட்சத்தில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
49 minute ago
2 hours ago