2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

வெற்றியின் முதலாவது மைல் கல்லை எட்டியுள்ளோம் : ரிஷாட் பதியுதீன்

Niroshini   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி. அன்சார்

முஸ்லிம்களின் அரசியல் அதிகாரக் களம் என்றும் முதுகெலும்பென்றும் வர்ணிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் கன்னி முயற்சியாக கால்பதித்து தனித்து நின்று ஒரே மாதத்துக்குள் 33 ஆயிரத்து 102 வாக்குகளைப் பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியின் முதலாவது மைல் கல்லை எட்டியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று சனிக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நீங்கள் அளித்த வாக்குகள் பணபலம், அடியாட்களின் அட்டகாசங்கள், அரச அதிகாரிகளின் முறையற்ற செல்வாக்கு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு பெறப்பட்ட உறுதியான வாக்குகளாகவே அமைந்துள்ளன.

எனவே, உன்னத சமுதாயம் ஒன்றை அமைக்க தேர்தலில் களமிறங்கி,இழந்து போன அரசியல் உரிமைகளை நிலைநாட்ட திரண்டு வந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சின்னமான மயிலுக்கு வாக்களித்து எமது கட்சியையும் தலைமையையும் அங்கீகரித்த அனைவரோடும் கைகோர்த்து எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் இப்பயணத்தை தொடர்வேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .