2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் வைபவம் இன்று புதன்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல்லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீமம், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்வாதாரப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மா அறைக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் என ரூபாய் 25 இலட்சம் பொறுமதியான வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X