2025 ஜூன் 28, சனிக்கிழமை

வட்டமடுவில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எஸ்.கார்த்திகேசு  

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்திலுள்ள வயல் வெளியில் பெரும்போகச் செய்கைக்கான வேலையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 09 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயல்வெளியை துப்புரவாக்கிக்கொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வட்டமடு தோணிக்கல் பிரதேசம் நீண்டகாலமாக மேய்ச்சல் தரையா அல்லது வேளாண்மைச் செய்யும் காணியா என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .