2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வயலிலிருந்து கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் 12ஆம் குடியேற்றப்பகுதி நெல் வயலிலிருந்து திங்கட்கிழமை (12) கைக்குண்டொன்று மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வயலை உழுதுகொண்டிருந்த வேளையில், மண்ணுக்குள்ளிருந்து தென்பட்ட இப்பொருளை வெளியில்  எடுத்துப் பார்த்தபோது, அது கைக்குண்டெனத்  தெரியவந்தது.

இது தொடர்பில் மல்வத்தை இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து வந்த கண்ணிவெடி செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் புதையுண்ட பழைய கைக்குண்டாக இருக்கலாமென்று நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X