2025 மே 12, திங்கட்கிழமை

வருடாந்த அணிவகுப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

 

கல்முனை  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த இறுதி அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்,  பொலிஸ் நிலைய வளாகத்தில், இன்று(6) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த  தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில், உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எல்.சூரியபண்டார  கலந்துகொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், அலுவலகங்கள்  என்பவற்றை பார்வையிட்டதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள வாகானங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X