Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை 06 வருடங்களுக்கு ஒத்தி வைத்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, இன்று செவ்வாக்கிழமை (24) தீர்ப்பளித்துள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் கடந்த 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவ் வழங்கு விசாரணை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (24) எடுத்துக்கொள்ளப்பட்ட போது 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை 06 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளார்.
27 வயதுடைய இந்தச் சந்தே நபரிடமிருந்து 150 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் பக்கெட்டுகளை மூன்றைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
15 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
2 hours ago