R.Tharaniya / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ‘அருவருப்பான காட்சிகளைப்’ பார்க்கும்போது, இன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. எந்தவொரு விசாரணையோ இல்லாமல் காட்சிகளை நாட்டின் முன் காண்பிப்பதன் தீவிரத்தைப் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
வீடியோக்களில் உள்ள சில காட்சிகளும், வெளிப்படுத்தப்பட்ட சில வார்த்தைகளும் உண்மையிலேயே ஒழுக்கக்கேடானவை. இந்த நேரத்தில் சம்பவம் தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால்,
சட்டம் மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள பல தரப்பினரின் பொறுப்பாகும். இந்த நாட்டில் உள்ள குடிமக்களுக்குச் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் தாக்கவோ, மக்களை நிர்வாணமாக்கவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அத்தகைய கருத்துக்களைப் பரப்பவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.
நவகமுவவில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படும் பௌத்த தேரர் மீது தாக்குதல் நடத்தி, அந்த பெண்களின் முகங்களையும் சமூக ஊடகங்களில் காண்பித்து, துறவியின் நிர்வாணமோ அல்லது அந்த துறவியின் அறைக்குள் நுழைந்த பெண்களின் நிர்வாணமோ மட்டுமல்ல. சம்பவத்தை சமூக மயமாக்குவதில் ஈடுபட்டவர்களின் நிர்வாணமும், தனிப்பட்ட துன்புறுத்தலும் முழு நாட்டிற்கும் ஒரு அபட்டதாக இருந்தது என்று சொல்ல வேண்டும்.
மறுபுறம், சம்பந்தப்பட்ட துறவியின் நேர்மையற்ற நடத்தை குறித்து சமூகத்தில் சில சந்தேகங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. ஒரு தவறு. அது ஒரு சாதாரண நபரால் செய்யப்பட்டாலும் சரி, ஒரு துறவியால் செய்யப்பட்டாலும் சரி, அது கண்டிக்கப்பட வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ யாராலும் நடந்ததைச் சரிசெய்வது எளிதல்ல. சட்டத்தின் முன் யார் குற்றவாளிகள் என்பது எங்களுக்குத் தெரியாது. இது தொடர்பான விசாரணைகள் மற்றும் முடிவுகளுக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு.
இதேபோலவே, இரவு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்ட இளைஞன்,
தான் இறங்கவேண்டிய இடத்தை தூக்கத்தால் தவறவிட்டு, வேறொரு இடத்தில் இறங்கி, தன்னுடைய உறவினர் வீடென நினைத்து மற்றுமொருவரின் வீட்டைத் தட்டியபோது, திருடன் என நினைத்து, அந்த இளைஞனைப் பிடித்துக் கட்டிவைத்துத் தாக்குதல் நடத்தியது மட்டுமன்றி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமையால், அவ்விளைஞன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், புஸ்ஸலவையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவனின் இரண்டு பற்கள் உடையும் அளவுக்கு அடிக்கப்பட்டமை சம்பவம், பயாகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பிரார்த்தனை அறையில் தனது குழந்தை மற்றொரு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், “எங்களுடன் விளையாட இன்னொரு குழந்தையை அழைத்துவர முடியாது” என்று கூறியதால் அச்சிறுவன் தாக்கப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் இந்த நாட்டில் நிகழாமல் பார்த்துக் கொள்வது இந்த நாட்டின் அனைத்து ஒழுக்கக் குடிமக்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் வெளிப்படுத்துகிறோம்.
4 minute ago
9 minute ago
17 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
17 minute ago
24 minute ago