Freelancer / 2023 ஜூலை 18 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா ஸ்ரீதரராவ்
இரத்தினபுரியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மகா சமன் தேவாயத்தின் 798 ஆவது வருடாந்த எசல பெரஹெர ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு மேற்படி தேவாலயத்தில் விசேட பிரித் பாராயண நிகழ்வும் இடம்பெற்றது.
சப்ரகமுவ மகா சமன் தேவாயத்தின் 798 ஆவது வருடாந்த எசல பெரஹெர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம்(01) திகதி வரை இடம்பெறவுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல் மேற்படி வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மகா சமன் தேவாயத்தின் எசல பெரஹெர அரச அனுசரனையில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வருடமும் மேற்படி தேவாலயத்தின் எசல பெரஹெர மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கு அரசாங்கத்தின் மூலம் பூரண அனுசரனையை பெற்று தருவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago