Janu / 2023 ஜூலை 19 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (18) சிறப்பாக நடைபெற்றது.

காலை 10.30 மணியளவில் வசந்த மண்டப சிறப்பு பூஜையையடுத்து 11.20 மணியளவில் கொடியேற்றத்திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள் இடம்பெற்று ஆகஸ்ட் 02ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய உள்ளது. அன்னதானம் மற்றும் பஸ் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை கதிர்காமம் உற்சவம் முன்கூட்டியே நிறைவடைந்திருப்பதால் உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல்விழா மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026