Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 04 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூயகாணிக்கை அன்னை ஆலய 400வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒரே நாளில் அதிகளவான சிறார்களுக்கு ஞானஸ்தானம் வழங்கி வைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை(02) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட நவநாள் திருப்பலி ஆலயத்தின் 400வது ஆண்டு ஸ்தாபகதின விசேட திருப்லி நிகழ்வும் தொடர்ந்து ஞானஸ்தானம்பெறும் சிறுவர்களுக்கான திருவிழா திருப்பலியும் இங்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.
மேலும், ஆலயத்தின் ஒன்பது வட்டாரங்க ளிலுள்ள ஞானஸ்த்தானம் பெறும் 400 சிறுவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago