Mayu / 2024 ஜூலை 07 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க சீதா அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து இடம்பெற்று வந்த மண்டலபிஷேகத்தின் பூர்த்தி விழா சனிக்கிழமை (06) வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதை தொடர்ந்து ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம்,வசந்த மண்டப பூசை, சுவாமிகள் உள்வீதி வலம் வந்து இடம்பெற்ற மகேஷ்வர பூஜையுடன் பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் முதல் நாள் நிகழ்வு நிறைவுபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வாக ஞாயிற்றுகிழமை (07) காலை வினாயகர் வழிபாடுடன் பட்டாபிஷேகம் இடம்பெற்று திருக்கல்யாணம், சுவாமிகளின் உள் வீதி வலம் ஆகியவற்றுடன் நிறைவுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .