2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மருத மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா

Freelancer   / 2023 ஜூலை 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட் 

மன்னார் மருத மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி  ஞாயிற்றுக்கிழமை (2) மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு  உயர் மறை மாவட்டத்தின்   துணை ஆயர் அருட்திரு அன்ரன் ரஞ்சித் ஆண்டகை  இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்  1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்றது. குறித்த முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக எதிர்வரும் வருடம்(2024) ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது.



அதனை முன்னிட்டு இன்றைய தினம் (ஜூலை மாதம் 2 ஆம் திகதி) திருவிழாவின் போது மன்னார் மறைமாவட்ட  ஆயர்   யூபிலி   நூற்றாண்டு விழாவினை பிரகடனம் செய்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X