2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அனுமதிக்க மறுத்த மருத்துவமனை; கர்ப்பிணிக்கு வீதியில் பிரசவம்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 24 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருப்பதியில் நிறைமாத கர்ப்பிணியொருவர் பிரசவத்திற்காக அரச வைத்தியசாலையை நாடியுள்ளார்.

 எனினும் அவருடன் யாரும் துணைக்கு வராத காரணத்தினால் குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அவர் சென்ற சிலமணிநேரங்களிலேயே அவருக்கு பிரசவ ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதியில்  விழுந்து துடித்த அவரைப் பார்த்த சிலர் போர்வைகளை வைத்து மறைப்பு ஏற்படுத்தி பிரசவம் பார்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ”அரசு விதித்துள்ள நிபந்தனைபடியே நாங்கள் செயல்பட்டோம் ”என்று குறித்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகக்  கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .