2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

அயோத்தியில் ஏற்றப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி

Mithuna   / 2024 ஜனவரி 18 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், வரும் 22-ம் திகதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமானோர் பரிசு பொருட்கள் மற்றும் காணிக்கைகளை அனுப்பியுள்ளனர்.

அவ்வகையில் குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3,610 கிலோ கிராம் எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட இந்த வாசனை ஊதுவத்தி ஏற்றப்பட்டது. இதன்மூலம் அயோத்தியில் நறுமணம் பரவத் தொடங்கியது.

ஊதுவத்தியை ஏற்றியபோது பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பினர். இந்த ஊதுவத்தியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை வாசனை வீசும் என்று கூறப்படுகிறது. இந்த ஊதுவத்தி முழுவதும் எரிய ஒன்றரை மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X