2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஒரே நாளில் 30 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Freelancer   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில், வெள்ளிக்கிழமை (13) மாத்திரம் 30 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை (14), ஆர்.கே.புரம் மற்றும் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள 8 பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது 3ஆவது முறையாகும்.

வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6:09 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் பொலிஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பாடசாலையில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, மின்னஞ்சல அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தேவையற்ற பீதிக்கு வழிவகுத்துள்ள தொடர்ச்சியான போக்கைக் குறிப்பதால், இது குறித்து முழுமையான விசாரணையை தொடங்கி உள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முன்னதாக கடந்த 9ஆம் திகதியன்று, குறைந்தபட்சம் 44 பாடசாலைகளுக்கு இதே போன்று மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X