Freelancer / 2023 ஜூலை 17 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூரை சேர்ந்தவர் 30 வயது பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் உடல்நலக் குறைவால் 2007 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது தாய் மாமன் சதீஷ் குமாரை இரண்டவாது திருமணம் செய்து கொண்டார்.
முதல் கணவருக்கு பிறந்த இரண்டு மகள்களுடன் 2 வது கணவன் சதீஷ்குமாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார் இந்த பெண். இந்த நிலையில், சதீஷ் குமார் தனக்கென வாரிசு வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்ய தொடங்கியுள்ளார், அதற்க்கு அந்த பெண் குடும்பக் கட்டுப்பாடு செய்து செய்துள்ளதாகவும், இனி அதற்க்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமுற்ற 2 வது கணவன் குழந்தை இல்லையென்றால் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். கிடைத்த இந்த வாழ்க்கையும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில், ' வேறு பெண்ணை நீ கல்யாணம் வேணாம் என் மூத்த பொண்ணுகிட்ட குழந்தை பெத்துக்கோ" என்று கூறி விசாகப்பட்டினத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சதீஷிடம் ஒப்படைத்தார் அந்த பெண்.
சிறுமி எவ்வளவோ மன்றாடியும் காதுகொடுக்காத தாயின் இரண்டாவது கணவன் சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் கர்ப்படைந்த சிறுமியின் கற்பதை வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்று கலைத்துள்ளனர், மீண்டும் சிறுமியை பலாத்காரமான் செய்ததால் இரண்டாவது முறை கர்ப்பமான சிறுமிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago