2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்தார்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஷிநகர்:

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இங்கு, இலங்கையில் இருந்து பௌத்த துறவிகளுடன் வந்த விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

புத்தர் முக்தி அடைந்த அடைந்த இடத்தை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரிகர்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமையும். மேலும், உலகம் எங்கும் உள்ள புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையம், உத்தரப் பிரதேசத்தின் 3வது மிகப்பெரியதாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் ஆளுநர் ஆனந்திபென், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ஜோதிராதித்யா சிந்தியா, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X