A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருப்பூர்:
''வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்லும் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார்'' என அவரது மகன் விஜயபிரபாகரன் பேசினார்.
விஜயகாந்த் பிறந்தநாளான நேற்று)தேசிய முற்போக்கு திராவிட கழக (தே.மு.தி.க.) சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் நேற்று நடந்தது.
இதில் விஜயபிரபாகரன் பேசியதாவது: வெற்றி,தோல்வி எல்லா கட்சிக்கும் உண்டு. ஒருமுறை தோல்வி அடைந்து விட்டதால் கேலி செய்கின்றனர். அரசியலில் இளைஞருக்கு வாய்ப்பு தருவேன்.
விஜயகாந்த் சிகிச்சைக்கு வெளிநாடு செல்கிறார். விரைவில் நல்ல உடல் நலத்துடன் திரும்புவார். அதன்பின் உங்கள் முன் மீண்டும் கம்பீரமாக பேசுவார். திருப்பூர் என்றுமே விஜயகாந்த் கோட்டை. நல்ல மனிதருக்கு வாய்ப்பு கொடுங்கள். சுவற்றில் அடித்த பந்தாக தே.மு.தி.க. மீண்டுவரும். மக்கள் மனநிலையை மாற்றுவோம். ஒற்றுமையாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
25 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
42 minute ago