Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர், விவாகரத்து கோரி குடும்பநல நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன், திருமணத்தின்போது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய நகைகளின் மதிப்பு மற்றும் ரொக்கப்பணத்தை மீட்டெடுக்க மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.
"திருமணத்தின்போது எனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும் சீதனமாக வழங்கினர். திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி என் கணவர் நகைகளை எல்லாம் வாங்கினார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம் கொடுத்தார். இது குறித்து கேட்டதற்கு அப்போது தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம் செய்துள்ளார்.
இருப்பினும், என் கணவரும் மாமியாரும் எனக்கு சீதனமாக வந்த நகைகளை விற்று அவர்களின் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர். அவற்றை மீட்டு தரவேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்
இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றத்தில், பெண்ணின் தங்க நகைகளைக் கணவரும் அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கணவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதை அந்த பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் . பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்த பெண்ணின் சொத்தாகவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago