Freelancer / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மாடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு சொந்தமான 2 எருமை மாடுகள், கன்றுக்குட்டி ஒன்றை கடந்த 1965-ம் ஆண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக அவர் பொலிஸில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தனர். இருவரில் ஒருவர் 2006-ம் ஆண்டு இறந்துபோனார்.
மற்றையவர், 1965-ம் ஆண்டு கைதான போது அவருக்கு வயது 20. சில மாதத்திலேயே பிணையில் வந்த அவர், 57 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் 77 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 hours ago
03 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
03 Mar 2026